உணவு கேட்டரிங் தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்காக அன்னபூர்ணா யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இதன் மூலம் 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படுகின்றது. இவற்றின் மூலம் சமயல் உபகரணங்கள், குளிர்சாதன பெட்டி, எரிவாயு இணைப்பு மற்றும் சாப்பாட்டு மேஜைகள் வாங்கலாம். இந்த கடன்களின் வட்டி விகிதங்கள் சந்தையை பொறுத்து மாறுபடும். கடன் தொகையை மூன்று ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். எஸ்பிஐ வங்கிக் கலையை தொடர்பு கொண்டு பெண்கள் இந்த கடனை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.