தமிழ் தொலைக்காட்சியின் முதல் நட்சத்திர தொகுப்பாளர் பெப்சி உமா. உமா மகேஸ்வரி ஆன இவர் பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானார். ஆண்கள் மத்தியில் மட்டுமல்ல அவரின் சேலை குறித்து பெண்களிடம் அப்போது பெரும் வரவேற்பு இருந்தது. பெப்சி உமாவிடம் ஒரு முறையாவது பேசிவிட மாட்டோமா என்ற ஏக்கம் பலருக்கு அப்போது அதிகம். அவ்வளவு ஏன் அது படங்களில் கூட அவ்வப்போது காட்சியாக  இடம்பெற்றுள்ளது . பல வருடங்கள் சின்னத்திரையில் நட்சத்திரமாக இருந்த அவருக்கு சினிமா வாய்ப்புகளும் தொடர்ந்து வந்தது .

ஆனால் அவற்றை முழுவதுமாக பெப்சி உமா மறுத்தார். அப்படி தனக்கு வந்த ஒரு வாய்ப்பு குறித்து பிரபல நடிகர் ஒருவரை குறித்தும் அவர் தெரிவித்த கருத்துக்கள் ரசிகர்களுடைய கவனத்தை வைத்துள்ளது. அதாவது பேட்டி ஒன்றில் பேசிய அவர், ரஜினியின் ஒரு படத்திற்கு பெப்சி உமாவை தேர்வு செய்த நிலையில் ரஜினியே நேராக போன் செய்து கேட்டாராம். ஆனால் அதை தான் மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார் .அதேபோல பேசும்போது ரஜினி எனக்கு உங்க பக்கத்துல எந்த பிரபலம் இருந்தாலும் கண்ணு போகாமல் உங்க பக்கமே போகிறது என்று சொன்னாராம்.