பீகார் மாநிலத்தில் ஜாதி சான்றிதழ் தொடர்பான ஒரு விசித்திர செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் வட்ட அலுவலகத்தில் நாய் ஒன்றுக்கு ஜாதி சான்றிதழ் வேண்டி விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. டாமி என்ற நாய்க்கு ஜாதி சான்றிதழ் கேட்டு விசித்திரமான விண்ணப்பம் வந்துள்ளதாகவும் ஆனால் விசாரணைக்கு பிறகு இந்த விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அது மட்டுமல்லாமல் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரில் நாயின் படம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பெயர் டாமி, தந்தையின் பெயர் ஷெரு, தாயின் பெயர் ஜின்னி மற்றும் பாலினம் ஆண் என குறிப்பிடப்பட்டுள்ளது.