தமிழ்நாடு மின்சார வாரியம் பராமரிப்பு பணிகளை ஒவ்வொரு துணைமின் நிலையங்களிலும் மாதம் தோறும் செய்து வருகிறது. அப்படி மின்வாரியம் பராமரிப்பு மேற்கொள்ளும் போது காலை 9 மணி முதல் மாலை 4 அல்லது 5 மணி வரை மின்தடை ஏற்படும். அப்படி ஏற்படும் மின்தடை குறித்து சரியான நேரத்தில் தகவல்கள் மக்களுக்கு கிடைப்பதில்லை. இதனால் பொதுமக்கள் மின்தடை குறித்து ஒரே நேரத்தில் அறிய முடிவதில்லை. திடீரென்று ஏற்படும் ஒரு நாள் மின்தடை அவர்களை மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கி விடுகிறது.

இது போன்ற சூழலில் தமிழகம் முழுவதும் எளிதாக மின் தடை எப்போதெல்லாம் ஏற்படும் என்பதை ஆன்லைன் மூலமாக நீங்களே வீட்டில் இருந்தபடி தெரிந்து கொள்ளலாம். அதற்கு https://www.tnebltd.gov.in/outages/viewshutdown.xhtml என்ற இணையதளத்தில் மின்வாரியம் இதற்கான வசதியை செய்து தந்துள்ளது. அந்த இணையதள பக்கத்திற்குச் சென்று CIRCLE பகுதியில் எந்த மாவட்டம் என்பதை தேர்ந்தெடுத்து கேப்சாவை உள்ளிட்டால் முழு விவரமும் உங்களுக்கு திரையில் தோன்றும். இதன் மூலம் எப்போது மின்தடை ஏற்படும் என்பது குறித்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.