உங்களுக்கு தான் தூக்கம் தொலைந்து விட்டது அதனால் தான் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து புலம்பி விட்டு போகிறீர்கள் என்று பிரதமர் மோடிக்கு டி ஆர் பாலு பதிலடி அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடிக்கடி தமிழகத்திற்கு வந்து செல்லும் பிரதமர் மோடி நேற்று சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்தார்.

அப்போது தமிழகத்தில் பாஜகவுக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கம் தொலைந்து விட்டது என விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டி.ஆர்.பாலு வெளியிட்ட அறிக்கையில், பத்தாண்டு அழிவு ஆட்சியில் இருந்து  விடுதலை பெற இந்திய மக்கள் தயாராகிவிட்டனர் என்று கூறியுள்ளார்