ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு நாம் தமிழர் கட்சி, தேமுதிக, அதிமுக, கட்சியின் சார்பாகவும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட இருக்கிறார்கள். இந்நிலையில் அமமுக கட்சி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்று காலை அமமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் சண்முகவேல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது கட்சி நிர்வாகிகள் பலரும் அமமுக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்பியதால் தற்போது அமமுக கட்சி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மேலும் கட்சியின் வேட்பாளர் மற்றும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.