அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சென்னையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் கூடி இடைத்தேர்தல் வேட்பாளரை முடிவு செய்யும் என கூறியுள்ளார். இது குறித்து முன்னாள் அமைச்சர் ஏ.கே.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஆட்சி மற்ற குழு கூட்டம் கூடி இடைத்தேர்தல் வேட்பாளரை முடிவு செய்யும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றிய தகவல் இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும்.  மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்நிலையில் இடைத்தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். மேலும் வாக்கு சேகரிக்கும் பணியை ஏற்கனவே நாங்கள் தொடங்கி விட்டோம். இந்த இடைத்தேர்தல் முடிவுகள் மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.