மாற்றுத்திறனாளிகள், மன வளர்ச்சி குன்றியவர்கள், முற்றிலும் பார்வையற்ற பயணிகள் மற்றும் மற்றொரு நபரின் உதவியில்லாமல் ரயிலில் பயணிக்க முடியாதவர்களுக்கு என பல்வேறு விதமான மக்களுக்கும் ரயில் டிக்கெட்டுகளில் இந்திய ரயில்வே சலுகை வழங்குகிறது. ரயிலில் பொது வகுப்பு, ஸ்லீப்பர் கிளாஸ் மற்றும் 3 ஏசி பெட்டிகளில் 75% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலும் ஏசி 1 & 2 பெட்டிகளில் 50% தள்ளுபடியும், ராஜதானி, சதாப்தி போன்ற ரயில்களின் 3ஏசியில் 25%வரை தள்ளுபடியும் கிடைக்கும். மேலும் இவர்களுக்கு உதவி செய்வதற்காக உடன் செல்லும் ஒரு நபருக்கும் இந்த சலுகை உண்டு.