நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் 1.20 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்கள் பயன் பெறுவார்கள் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் தமிழக பட்ஜெட்டில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த அறிவிப்பின்படி பொதுத் துறை செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டு வருகிறது.