சமூக வலைதளங்களில் ஒரு சுவாரசியமான வீடியோ வைரலாகி வருகிறது. அதில், தீயணைப்பு வீரர்கள் சிலர் ஒரு பெரிய மரத்தை அப்புறப்படுத்துவதற்காக அதன் கிளையில் கயிற்றைக் கட்டி, பலரும் சேர்ந்து பலங்கொண்டு இழுத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது திடீரென அங்கிருந்த ஒரு தெரு நாய், தானும் உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கயிற்றின் இறுதி முனையைத் தனது வாயால் கவ்விக்கொண்டு, வீரர்களுடன் சேர்ந்து பின்னோக்கி இழுக்கத் தொடங்கியது.
நாய் அவ்வளவு தீவிரமாகத் தனக்கும் பலம் இருப்பது போல இழுத்ததைப் பார்த்த தீயணைப்பு வீரர்கள், ஆச்சரியத்திலும் சிரிப்பிலும் ஆழ்ந்தனர். மரத்தை இழுக்கும் அந்தப் பதட்டமான சூழலிலும், இந்தச் சின்னஞ்சிறு உயிரின் பேருதவி அங்கிருந்தவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. இந்த வீடியோ எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட சில மணிநேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.
The local firefighters couldn't stop laughing when a stray dog helped them 😂❤️ pic.twitter.com/SgwyQjCzTd
— Restoring Your Faith in Humanity (@HumanityChad) February 12, 2026
“நாய் எப்போதும் மனிதனின் உண்மையான நண்பன் தான்” எனப் பலரும் இந்த வீடியோவைப் பார்த்து நெகிழ்ச்சியுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
