கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பாக பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் 16ஆம் தேதி மயிலாடுதுறையில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமானது காலை 8.30 மணி முதல் மதியம் மூன்று மணி வரை இருக்கிறது. இந்த முகாமில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி, 12ஆம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_signup என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பம்  செய்து தங்களுடைய வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.