இந்தியாவில் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. இதில் கேஸ் அடுப்பு முதலாவது சிலிண்டரும் பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 32 லட்சம் பயனாளிகளுக்கு கேஸ் இணைப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 3 ஆண்டுகளுக்கு இந்த திட்டம் மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 1650 கோடி ரூபாய் செலவில் கூடுதலாக 75 லட்சம் காஸ் இணைப்புகள் வழங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த திட்டம் தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால் இன்னும் அதிகமான பயனார்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.