தனியார் பள்ளிகளில் இலவசமாக எல்கேஜி படிப்பதற்கான மாணவர் சேர்க்கைக்கு மார்ச்  20ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை குறித்து பெற்றோர்கள் அறியும் வகையில் தனியார் பள்ளிகளின் நுழைவாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. 14 வயது வரையில் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் மூலமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பொருளாதார வாரியாக பின்தங்கிய மாணவர்கள் இலவச கல்வி பெற்று வருகிறார்கள். அவர்களுக்கான அனைத்து கல்வி செலவுகளையும் அரசே ஏற்கின்றது. அதன்படி எல்கேஜி மாணவர் சேர்க்கைக்கு மார்ச்  20ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் பயில 2023-24ஆம் ஆண்டுக்கான 25 சதவீதம் இடங்களுக்கு மார்ச் 20 முதல் ஏப்ரல் இருபதாம் தேதி வரை ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானவுடன் அரசு வைத்துள்ள நிலுவைத் தொகையை உடனே செலுத்தவில்லை என்றால் இந்த திட்டத்தை தொடர்வது குறித்து பரிசளிக்கப்படும் என தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது