தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலைய நுழைவாயிலுக்கு இலவச மினி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மக்களிடம் பேருந்து நிலைய வசதி குறித்து கேட்டேன். இப்போது சிலவற்றை வேண்டுகோளாக கூறினார்கள். அனைத்தையும் அரசு பரிசீலிக்கும். போதுமான பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் கூட்ட நெரிசல் நிச்சயம் இருக்காது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.