இலங்கையில் இருந்து தனுஷ்கோடி வழியாக படகுமூலம் கடத்திவரப்பட்ட தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனுஷ்கோடி கடற்பகுதியில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு படகை சுற்றி வளைத்து சோதனை செய்ததில் அந்த படகு மூலம்தான் தங்கக் கட்டிகள் கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

9ல் இருந்து 10 கிலோ வரை தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள் சுங்கத்துறையில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.