
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கவலை அளிக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில், 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கைதுகள் அதிகரித்துள்ளன. மேலும் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், மூன்று மீனவர்கள் மீது அநியாயமாக முத்திரை குத்தப்பட்டு, அவர்கள் நீண்டகாலமாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையானது எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துவது மட்டுமன்றி அவர்களின் படகுகள் இலங்கை அரசால் தேசியமயமாக்கப்பட்டிருப்பதால் அவர்கள் கடின உழைப்பில் சம்பாதித்த சேமிப்பையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.
மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களிடம் நமது மீனவர்களை திருப்பி அனுப்புவதையும், அவர்களின் படகுகளை விடுவிப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும், இராஜதந்திர ரீதியில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பாக நான் வலியுறுத்துகிறேன். இந்த விஷயத்தை முதன்மைப்படுத்தி, நமது மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுப்பது முக்கியம், ஏனென்றால் அவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல, பெருமைமிக்க இந்தியர்கள்” என தெரிவித்துள்ளார்.
The continuous apprehension of Tamil Nadu fishermen by Sri Lankan Navy is deeply concerning. Over the past two months, there has been a sharp rise in arrests, with a staggering 69 fishermen apprehended. What's more alarming is the unjust branding of three fishermen as habitual… https://t.co/zgTCfVJuni
— M.K.Stalin (@mkstalin) February 18, 2024