இறந்துபோன மகளுடைய ஜீவனாம்ச நிலுவை தொகையை பெற அவரது தாய்க்கு உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மதுராந்தகம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை – சரஸ்வதி தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளனர். இதனால் சரஸ்வதிக்கு ஜீவனாம்சமாக மாதம் 37,500 வழங்க அண்ணாதுரைக்கு மதுராந்தகம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நிலுவையில் இருந்த 6.2 லட்சத்தை வழங்க கோரிய மனு நிலுவையில் இருந்தபோதே விவாகரத்து பெட்ரா மனைவி சரஸ்வதி மரணமடைந்துள்ளார். இதனால் அவரது தாயார் ஜெயா என்பவரை இந்த வழக்கில் இணைத்ததை எதிர்த்து அண்ணாதுரை தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.