தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் சின்னசாமி ராணுவ வீரர் பிரபுவை அடித்து கொன்ற சம்பவம் போச்சம்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் திமுக கவுன்சிலரால் ராணுவ வீரர் பிரபு அடித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து பாஜகவின் முன்னாள் ராணுவ வீரர்கள் இன்று தமிழ்நாடு முழுவதும் போராட்டம் செய்ய உள்ளனர்.

அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ராணுவ பேட்ஜ், தொப்பி அணிந்து போராட உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதில் கலந்துகொள்ள அனைத்து ராணுவ வீரர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். தலைமறைவாக உள்ள கவுன்சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.