காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி நேற்றைய டெல்லியில் பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து அவர் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டார். கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் விஜயதாரணி எம்எல்ஏ பதவியை பறிக்க சபாநாயகரின்டம் காங்கிரஸ் கோரிக்கை வைத்திருந்தது. இந்த நிலையில் விஜயதாரணி தாமாகவே எம்எல்ஏ பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதனால் மக்களவைத் தேர்தலுடன் விலவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் வரவுள்ளது.