தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மேலும், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.