இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடாமல் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி விலகியிருந்தார். இதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டன. அவரின் தாயார் உடல்நிலை மோசமாக உள்ளது அதன் காரணமாகவே விராட் கோலி விளையாடவில்லை என கூறப்பட்டது.

அதற்கு கோலியின் சகோதரர் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் தங்களது இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராக உள்ளனர். அதனால்தான் கோலி டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுகிறார் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.