பிரபல குளிர்பான நிறுவனமான Coco Colo இந்திய சந்தையில் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளது. இதுகுறித்து டெக் நிபுணர் முகுல் ஷர்மா கூறியதாவது “Coco Colo ஸ்மார்ட்போன் மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அதற்காக ஒரு ஸ்மார்ட்போன் பிராண்டுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

இந்த Coco Colo ஸ்மார்ட்போன் REALME 10 pro 4g போல இரட்டை கேமராவுடன் உள்ளது. Coco Colo ஸ்மார்ட் போன் தோற்றத்தில் ரியல்மி-10 4G போன்றே காட்சி அளிக்கிறது. இதன் பின்புறம் இரட்டை கேமரா சென்சார்கள், எல்இடி பிளாஷ், வலதுபுறத்தில் வால்யும் ராக்கர், வளைந்த எட்ஜ்கள் இருக்கிறது. ஸ்மார்ட்போனை சுற்றி சிவப்பு நிறம் உள்ளது.