தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தான் எந்திரன். இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் 2010 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து ஒரு கோடி இழப்பீடும் கோரி இருந்தார். பல வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி எந்திரன் திரைப்பட கதைக்கும் மனுதாரரின் கதைக்கும் அதிக அளவு வேறுபாடுகள் உள்ளது எனக் கூறி இந்த வழக்கு இன்று  முடித்து வைக்கப்பட்டது.