
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா குடியிருப்பு வீட்டு வசதி துறை அரசு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லோகேஷ் முதியோர் ஒருவர் வரிசையில் நீண்ட நேரம் காத்துக் கொண்டிருப்பதை கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்தார். அவர் கவுண்டருக்கு சென்று ஒரு பெண் அதிகாரியிடம் முதியவர் வேலையை உடனே முடித்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். 20 நிமிடம் கழித்து லோகேஷ் கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது அந்த முதியவர் தொடர்ந்து வரிசையில் நின்று கொண்டிருந்தார். உடனே லோகேஷ் அந்த பெண் ஊழியரிடம் இது குறித்து கேட்டார். ஆனால் அவர் சரியாக பதில் கூறவில்லை.
இதனால் அனைத்து ஊழியர்களையும் 20 நிமிடம் நின்று கொண்டே வேலை பாருங்கள் என லோகேஷ் நூதன முறையில் தண்டனை கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அரசு அதிகாரிகள் சரியான முறையில் வேலை பார்க்க இது போன்ற தண்டனை அவசியம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து லோகேஷ் கூறும்போது, வரிசையில் நின்ற முதியவருக்கு சொத்து பிரச்சினை தொடர்பாக பதில் அளிக்காமல் அரசு ஊழியர் வரிசையில் காக்க வைத்துள்ளார். நான் கண்காணிப்பு கேமராவில் பார்த்து அதை தெரிந்து கொண்டேன். அவரிடம் சென்று வேலையை விரைந்து முடிக்கும் படி கேட்டேன். ஆனால் ஒரு மணி நேரமாக முதியவர் நிற்கிறார். எனவே 20 நிமிடம் எழுந்து நின்று வேலை பார்க்கும்படி தண்டனை கொடுத்ததாக லோகேஷ் கூறியுள்ளார்.
नोएडा अथॉरिटी में एक बुजुर्ग दंपति फाइल पास कराने के लिए भटक रहे थे, लेकिन सुनवाई नहीं हो रही थी।
CEO ने ये देख सभी कर्मचारियों को 30 मिनट तक खड़े होकर काम करने की सजा सुनाई !! pic.twitter.com/yUgMZlu4xE
— Sachin Gupta (@SachinGuptaUP) December 17, 2024