நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு மலை அடிவாரப் பகுதியில் தர்மேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஸ்ரீமதி என்ற பெண்ணுடன் தர்மேஷுக்கு திருமணம் நடைபெற்றது. கணவன் மனைவி இருவரும் ஜி.என் மில்ஸ் பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் தான் குடியிருக்கும் வீட்டில் பழுதான மின்விசிறியை தர்மேஷ் சரி செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். மேலும் சம்பவ இடத்திலேயே தர்மேஷ் உயிரிழந்தார். தனது கணவரின் உடலை பார்த்து ஸ்ரீமதி கதறி அழுதார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தர்மேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்