தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே  மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்தவகையில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று திங்கள்கிழமை இந்த மாவட்டங்களில் கனமழை அதிகமாக இருந்தால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுபற்றி மாவட்ட ஆட்சியர்கள் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.