சென்னையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்கு இன்று ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகிக்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். விரைவில் சென்னை மற்றும் புறநகரில் இயல்பு வாழ்க்கை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தகவல் தெரிவித்தார்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த தொடர் மழையால் பல இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மீட்புப் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன. தன்னார்வலர்களும் வெள்ளத்தில் சிக்கியுள்ள பொதுமக்களுக்கு உதவிகளைச் செய்துவருகின்றனர்.