பெருநகர சென்னை மாநகராட்சியில் வாகனங்களுக்கான புதிய வேக வரம்பு இன்று (நவம்பர் 4ஆம் தேதி) முதல் அமலுக்கு வர உள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இருசக்கர வாகனங்கள் 50 கி.மீ., ஆட்டோக்கள் 40 கி.மீ. வேகத்திற்குள் தான் இயங்க வேண்டும் என்றும் இலகுரக வாகனங்கள் 60 கி.மீ., கனரக வாகனங்கள் 50 கி.மீ. வேகத்திலும் செல்லலாம் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லும் வாகனங்களுக்கு 30 கி.மீ. வேக கட்டுப்பாடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.