தமிழகத்தில் உள்ள கடல் பகுதிகள் இன்று மாலை வரை கொந்தளிப்புடன் காணப்படும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரித்துள்ளது. காற்றின் போக்கு காரணமாக கள்ளக்கடல் சூழல் நிலவுவதால் பொதுமக்கள் கடலுக்கு அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, குமரி கோடிமுனை கடற்கரையில் பாறை மீது நின்று வேடிக்கைப் பார்த்த சென்னையைச் சேர்ந்த இருவர், ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.