நீலகிரி மாவட்டம் உதகை  ரோஜா பூங்காவில் இன்று மே 10 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை ரோஜா கண்காட்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 126 வது மலர் கண்காட்சி வருகின்ற மே பத்தாம் தேதி தொடங்க உள்ளது. இருபதாம் தேதி வரை தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த மலர் கண்காட்சியின் மே10 முதல் 19ஆம் தேதி வரை ரோஜா கண்காட்சி தனியாக நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தற்போது கோடை விடுமுறை என்பதால் உதகை மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு மக்கள் அதிக அளவில் படையெடுத்து செல்கின்றனர்.