மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 25 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.6,000 நிவாரணம் இன்று வினியோகம் செய்யப்படுகிறது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்து மக்கள் தங்களுடைய உடைமைகளை இழந்தார்கள். இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ரூ.6 ஆயிரத்துக்கான நிவாரண டோக்கன்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் நலன் கருதி இன்று 6000 வழங்கபடுகிறது. இந்த பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார். டோக்கன் அடிப்படையில் அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் ரூ.6,000 நிவாரண நிதி வழங்கப்படும். காலை 9 முதல் பகல் 1 மணி வரையும். மதியம் 2 மணிமுதல் மாலை 5 மணி வரையும் வழங்கப்படும்.