புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதி-க்கு பதிலாக, பிரதமர் மோடி திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய ஆதிவாசி காங்கிரஸ் சார்பில் இன்று நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று அதன் தலைவர் சிவாஜிராவ் மோகே அறிவித்துள்ளார். மோடி அரசின் சர்வாதிகார முடிவு ஆதிவாசிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது நாட்டின் முதல் பெண்மணியான ஆதிவாசி ஜனாதிபதியை ஓரங்கட்டும் செயல் ஆகும் என குற்றம் சாட்டினார்.