சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு காய்கறி சந்தை செயல்பட்டு வந்தது. இங்கு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள  வியாபாரிகளும் வாங்கி சென்றனர்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி சந்தை இன்று (ஜனவரி 17) இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு பொங்கலை முன்னிட்டு சிறப்பு சந்தை செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.