தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் சென்றார். அங்கு நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்த நிலையில் மன்னார்குடியில் நடைபெற்ற திமுக பிரமுகரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது, திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது.

நாங்கள் பொறுப்பேற்ற உடனே விவசாயத்திற்காக தனி பட்ஜெட்டை அறிவித்தோம். இதேபோன்று இந்த ஆண்டும் விவசாயத்திற்காக தனி பட்ஜெட் அறிவிக்கப்படும். கடந்த மாதம் மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்து விட்டது என்றார். மேலும் ஒரு வாரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் கூறினார்.