நெல்லை மாநகரில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள திமுக கட்டவுட் மற்றும் பிளக்ஸ் பேனர்களை ஒரு மணி நேரத்தில் அகற்ற வேண்டும் எனவும் இல்லை என்றால் கடுமையான நடவடிக்கைக்கு உத்தரவிட நேரிடும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற கோரிய வழக்கில் பேனர்களை அகற்றுவதில் ஒரே மாதிரி நடவடிக்கைகளை உள்ளாட்சி நிர்வாகம் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.