தமிழகத்தில் இன்ஜினியரிங் பாடத்திட்டத்தில் கம்ப்யூட்டர் கேமிங் என்ற காமிக்ஸ் கிராபிக்ஸ் உள்ளிட்ட அம்சங்களை சேர்ப்பதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் ஒவ்வொரு துறைகளிலும் தகவல் தொழில்நுட்பம் என்ற ஐடி செயல்பாடுகள் அதிகரித்து விட்டன. அதாவது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என்ற செயற்கை நுண்ணறிவு ஏ ஐ தொழில்நுட்பம் மற்றும் மெஷின் லேர்னிங் என்ற கணினி வழி கோடின் கட்டுப்பாடுகள் என அனைத்து துறைகளிலும் பல தொழில்நுட்பங்கள் உள்ளன. வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் விளம்பர வீடியோக்கள், தொழில் நிறுவன தகவல் பணிகளுக்கு இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து தொழில்நுட்ப பணிகள் வழங்கப்படுகின்றது.

இதற்கு அதிக மவுசு உள்ளதால் பள்ளிகள் மற்றும் கல்லூரி பாடங்களில் இந்த அம்சங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தருவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இன்ஜினியரிங் பாடங்களில் கம்ப்யூட்டர் கேமிங் மற்றும் காமிக்ஸ் தொழில்நுட்ப தகவல்களை சேர்ப்பதற்கு ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தை பாதிக்காத விதமாக புதிய தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியாக வருவாய் ஈட்டும் வகையில் பயன்படுத்த இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.