தமிழகத்தில் காவல்துறையின் தலைவராக இருந்த டி ஜி பி சைலேந்திர பாபு நேற்று பணி ஓய்வு பெற்றார். பணி ஓய்வு பெற்ற சைலேந்திரபாபுவுக்கு பிரிவு உபசார விழா எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அதில், டிஜிபி சங்கர் ஜிவால், சைலேந்திரபாபுவுக்கு நினைவு பரிசு வழங்கினார்.

இந்நிலையில் மாணவர்களுடன் என்னுடைய பயணம் தொடரும் என்று ஓய்வு பெற்ற சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், காவல்துறை பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். இனி மாணவர்களுடன் நமது பயணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.