விமான பயணத்தின் போது 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர்களின் அருகிலேயே இடம் ஒதுக்க வேண்டும் என விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்தை இயக்குனராகம் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளிடம் அமர முடியாமல் போனது குறித்து பயணிகள் புகார் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து விமான பயணத்தின் போது குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் உடன் இருப்பதை உறுதி செய்ய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.