தமிழக அரசு ஆணைப்படி தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்காதவர்கள் மீது அதிக அபராதம் விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. முதல் முறை ஒரு தொகையும் மீண்டும் விதிமீறலை தொடர்ந்தால் அதிக தொகையும் அபராதம் விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை தமிழ் பெயர்கள் இல்லாத 6,074 கடைகளில் 4.58 லட்சமும், 349 உணவகங்களில் 32 ஆயிரத்து 800 அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.