தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் அனைவரும் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்று தமிழக அரசு சற்றுமுன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2021ம் ஆண்டு அரசாணையை சுட்டிக்காட்டி, டி.பி.ஐ. வளாகம் தொடங்கி கடைநிலை அலுவலகம் வரை பெயரை தமிழில் மாற்றவும், ஆவணங்கள், வருகைப்பதிவு என அனைத்திலும், ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.