உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து தலைமையிலான விவசாயிகள் , மத்திய நிர்வாக துறை அமைச்சர் கஜேந்திர சிங், வேளாண் துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி ஆகியோரை சமீபத்தில் சந்தித்து விவசாயம் குறித்து பல்வேறு விவகாரங்களை பேசினர். அப்போது தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக ஆறு மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளின் மூலமாக தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் எனவும் பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று மத்திய வேளாண் இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.