இந்திய ரிசர்வ் வங்கி வருகின்ற பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பயணர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உருவாக்கிய பரிமாற்ற செயலி தான் பீம். இந்த புதிய டைம் லிமிடெட் கேஷ் பேக் ஆஃபர் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதாவது சில பயன்பாடுகளுக்கு கேஷ்பேக் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மார்ச் 31ஆம் தேதி வரை பயனர்களுக்கு கிடைக்கும். பீம் செயலி பயனர்கள் தங்கள் ஸ்மார்ட் ஃபோன்களில் உள்ள பீர் ஆப்பை வெர்ஷன் 3.7 அல்லது அதற்கு மேற்பட்ட பெருசனுக்கு அப்டேட் செய்தால் மட்டுமே இந்த வசதி பயனர்களுக்கு கிடைக்கும்.

அதேசமயம் உணவு மற்றும் பயணம் தொடர்பான கட்டணங்களுக்கு 100 ரூபாய்க்கு மேல் பண பரிமாற்றம் செய்தால் பிளாட் கேஷ் பேக் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அதனைப் போலவே பெட்ரோல் டீசல் மற்றும் சிஎன்ஜி உள்ளிட்ட அனைத்து எரிபொருள் கட்டிடங்களுக்கும் ஒரு சதவீதம் கேஷ் பேக் கிடைக்கும் எனவும் அறிவித்துள்ளது. மேலும் பயனர்கள் தங்கள் பீம் ஆப் உடன் இணைக்கப்பட்ட ரூபே கிரெடிட் கார்டை வைத்திருந்தால் ஒரு ரூபாய்க்கு மேல் செய்த முதல் மூன்று பரிவர்த்தனைகளுக்கு 100 பிளாட் கேஷ் பேக் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது ,