
மத்திய பிரேதேசத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி, இந்திய அறிவின் பாரம்பரியத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்குவதற்காக இந்தப் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை மாநில உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து உயர்கல்வித்துறை சார்பாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியதாவது, பரிந்துரைக்கப்பட்ட 88 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பை உடனடியாக கல்லூரி நிர்வாகம் வாங்கி அதை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று அறியுறுத்தப்பட்டுள்ளது.
அந்த புத்தகங்களில் ஆர்எஸ்எஸ் தலைவர்களான சுரேஷ் சோனி, தினநாத் பத்ரா, டி.அதுல் கோதாரி, தேவேந்திர ராவ் தேஷ்முக், சந்தீப் வசேல்கர் ஆகியோரின் புத்தகங்கள் அடங்கும். இவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வித்யா பாரதியில் அங்கம் வகித்தவர்கள். அதோடு மாணவர்களுக்கு இந்த புத்தகம் பற்றி விளக்கி கூற, அனைத்து கல்லூரிகளிலும் பாரதிய கியான் பரம்பரா ப்ரக்சோதா செயல்களை அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. அந்த மாநில பாஜக அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.