சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் கருத்தரித்தல் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே போன்று மதுரையில் மையம் அமைக்க திட்ட மதிப்பீடு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதற்கான அனுமதி கிடைத்ததும் விரைவில் மதுரையிலும் செயற்கை கருத்தரித்தல் மையம் அமைக்கப்படும் என்று  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு தகவல் அளித்துள்ளது.