தமிழகத்தில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் தங்களது உயர்கல்வி திறனை மெருகேற்றும் வகையில் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாணவிகள் போல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும்  இந்த திட்டமானது வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த ஐம்பெரும் விழாவில் பங்கேற்ற அவர், அரசுப் பள்ளியில் படித்துவிட்டு கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கு சென்றபோது புதுமைப்பெண் திட்டத்தை பலரும் பாராட்டியதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.