நாள்தோறும் பெண்களுக்கு எதிரான பலாத்கார சம்பவங்கள் எதாவது ஒன்று அரங்கேறி கொண்டே தான் இருக்கிறது. இது குறித்த தகவல்கள் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இதுபோன்ற கொடுமையான பலாத்கார சம்பவங்களால் ஒருபக்கம் பல பெண்களின் வாழ்க்கை சீரழிந்து போகிறது. மறுபக்கம் பல பெண்கள் உயிரிழக்கிறார்கள் என்பது வேதனையளிக்க கூடிய ஒரு செயல்.

இந்நிலையில் பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க பெண் ஒருவர் தந்திரமாக செயல்பட்டுள்ளார். உ.பி மாநிலம் மீரட்டில் இளைஞர் ஒருவர் பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக முத்தமிட, அந்த பெண், இளைஞரின் உதடுகளை கடித்து துப்பியுள்ளார். இதையடுத்து பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் வந்து அவரை காப்பாற்றினர். மேலும், ரத்த வெள்ளத்தில் துடித்த இளைஞரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.