தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்த நிலையில் விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் நனைந்தவாறு சென்றனர். பல மாணவ மாணவிகள் கனமழையால் தவிப்புக்கு உள்ளாக்கினர். இதனால் பல பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.