மகளிர் உரிமை தொகையானது செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இரண்டாவது மாதத்திற்குரிய பணமானது நாளை முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், 1.6 கோடி பேருக்கு ஒரே நேரத்தில் வங்கி கணக்கில் பணம் செலுத்த முடியாது. இதனால், ஒருநாள் முன்னதாகவே, இன்றே ரூ.1000 செலுத்தப்படுமா என பெண்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல் தவணை தொகையை செப்.15க்கு பதில் ஒரு நாள் முன்னதாக 14ம் தேதியே அரசு செலுத்தியது. அதேபோல், இம்மாதமும் நடக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.