கேரள மாநிலத்தில் 17 வயது பெண் ஒருவர் தன்னுடைய தந்தைக்கு கல்லீரல் தானம் செய்துள்ளது பலரையும் நெகிழ வைத்துள்ளது. கேரள மாநிலம் திருசூரை சேர்ந்த அந்த பெண்ணின் தந்தை நீண்ட நாட்களாக கல்லீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட வந்தார். இதற்கு மாற்று கல்லீரல் பொருத்துவதே தீர்வு என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் அவரின் மகள் தேவந்ததா தற்போது தனது கல்லீரலை தானமாக கொடுக்க முன் வந்தார். இதனைத் தொடர்ந்து அவரின் தந்தைக்கு கடந்த பிப்ரவரி ஒன்பதாம் தேதி சிகிச்சை நிறைவு பெற்ற நிலையில் தற்போது அவர் நலமாக உள்ளார். இந்தப் பெண்ணின் செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது.