
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள எம்எல்ஏ விடுதி கேன்டீனில், உணவு தரம் குறித்து எழுந்த புகாருக்குப் பிறகு, கேன்டீன் ஊழியரை தாக்கியதாக சிவசேனா (ஷிண்டே குழு) எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் மீது குற்றச்சாட்டு எழுந்தது. பழைய உணவுகள் வழங்கப்பட்டதாகவும், உணவு மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகவும் அவர் குற்றம் சாட்ட, கேன்டீன் ஊழியரிடம் வன்முறையாக நடந்துகொண்டதின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. பருப்பின் தரம் குறித்து கேள்வி எழுப்பிய கெய்க்வாட், ஊழியரிடம் கையால் தாக்கியும், உதைத்து எச்சரித்தும் செயல்பட்டார். இது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் எதிர்க்கட்சிகளின் கண்டனத்தையும் கடும் விமர்சனங்களையும் ஈர்த்தது. அஜந்தா கேட்டரர்ஸ் நிறுவனத்தின் உணவுப் பொருட்கள் குறித்து மத்திய உணவுப் பாதுகாப்பு நிறுவனமான எஃப்.டி.ஏ. ஆய்வு மேற்கொண்டது. பருப்பு, பன்னீர், சட்னி, மீண்டும் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் உள்ளிட்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. உணவுப் பாதுகாப்பு சட்டங்களை மீறியதற்காக அஜந்தா கேட்டரர்ஸ் நிறுவனத்தின் உரிமம் இடைநீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் சிவசேனா (UBT) தலைவர் அனில் பராப், கெய்க்வாட்டை இடைநீக்கம் செய்யக்கோரி, முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸை வலியுறுத்தினார். ஃபட்னாவிஸும் இந்த சம்பவம் மக்களுக்கு தவறான சிந்தனைகளை உருவாக்கும் என ஒப்புக்கொண்டார்.
தனது நடத்தையை விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த கெய்க்வாட், “என் நடத்தை தவறு என்பதை ஒப்புக்கொள்கிறேன், ஆனால் நோக்கம் சரியானது. பொதுமக்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டது என்பதை நான் தடுக்கவே முயற்சித்தேன். தற்போது உணவு தரம் மீது அதிகாரிகளும் கவனம் செலுத்துகின்றனர். எஃப்.டி.ஏ உரிமத்தை ரத்து செய்ததிலேயே அதற்கான பதில் இருக்கிறது” என தெரிவித்தார். உணவு தரம் தொடர்பான நடவடிக்கையை வலியுறுத்தும் விதமாகவே தனது செயல் இடம்பெற்றதாகவும், இதுபோன்ற நிலைமைகள் மீண்டும் ஏற்படக்கூடாது என்றும் கெய்க்வாட் வலியுறுத்தினார்.
#WATCH | Mumbai: Food and Drug Administration (FDA) officials took food samples from the Akashvani MLA canteen. Shiv Sena MLA Sanjay Gaikwad thrashed a canteen employee here yesterday, alleging poor quality of food
“Samples of paneer, Schezwan chutney, oil and toor dal have been… pic.twitter.com/SZw4hhBRuS
— ANI (@ANI) July 9, 2025